Tuesday, September 6, 2016

விளம்பரத்தால் உயர்ந்த பிம்பம்

ஜக்கி பற்றி.. ம்ருத்திகா எனும் தோழி சுட்டியும் தந்த போதும் பார்க்கவில்லை. பின் பலரும் சொன்னார்கள்..
ஆகவே அந்த தொலைகாட்சி ஒளிபரப்பைப்பார்த்தேன்.
ஹா..
முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.- பாண்டே சொன்னது  போல் நான் ரஜ்னீஷ்/ஓஷோவை இந்த போலி imitate செய்வதாய்ச் சொல்லவில்லை, இது அவரிடமிருந்து திருடி பேசுவதாய்த் தான் சொன்னேன்.
IMITATION CAN BE PARDONED AS A POOR ART, BUT PLAGIARISM IS DEFINITE THEFT- CONDEMNABLE AND PUNISHABLE.
அப்புறம், இதை நான் சந்தித்த கதை!
1990களின் மையத்தில்  நான் ஓரளவு தொலைகாட்சி வழியாய் பிரபலம். அப்போதெல்லாம் என் தினசரி மதிய உணவு சென்னை பாண்டி பஜார் பாலாஜி பவனில் தான். தொடர்வாடிக்கையாளர் எனும் முறையில் உரிமையாளரிடம் புன்னகைப் பழக்கம். ஒரு சாப்பிடும் நேரம் அவர் வந்து ஒரு மகான், யோகி..என்றெல்லாம் ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போதெல்லாம் என்னிடமும் ஒரு குரு தேடல் இருந்ததும் கடன் தொல்லையும் இருந்தது. எதனால் என்று இன்று நிச்சயமாய் சொல்ல முடியவில்லை, போய்த்தான் பார்ப்போமே என முடிவெடுத்தேன். முதல்லெ நாரத கான சபா வாங்க.. ஸ்பெஷல் ப்ரோக்ராம், ஸீட் புக் பண்ணி வெக்கறேன்என்றவர் பேச்சுக்கிணங்கி போனேன். well designed opening..packing was glittering more than the content..உமாவிடம் இது ரொம்ப உடான்ஸா இருக்கே என்றதற்கு..dont be a cynic என்றாள்.
நாகரிகம் கருதி  (சமயங்களில் நாகரிகம் என்பது பரிதாபத்தின் இன்னொரு பெயர்). கடைசிவரை இருந்து வெளிவந்து கார் தேடும் போது அந்த உணவகத்தின் இளைஞன்  ‘ சார் வாங்க இண்ட்ரொட்யூஸ் பண்றேன்’ எனவும், அந்த மனிதனை பார்த்தேன் கை குலுக்கினேன். பேசாமல் வந்து விட்டேன்.
அடுத்த சில நாட்களின் ஒன்றில், அந்த இளைஞன்  அவரை நீங்க பாக்கணும் பேசனும் என்ற போதும் என் இயல்பான MAN WATCHING CURIOSITY யுடன் தான் போனேன், உமாவுடன்.
சென்னை லாய்ட்ஸ் சாலையில் ஒரு ஸ்பெஷல் எஃபெட்ஸ் ஸ்டுடியோ, மாடியில் உமாவும் நானும் அந்த இளைஞனும் இருக்க ஒரு dramatic delayed entry.
அறிமுகம் செய்யப்பட்டும் நான் சும்மா இருக்க தானே பேசிய அந்த alleged மகான்.. தான் பிறந்து வளர்ந்து ஒரு கட்டிடம் கட்டுமிடம் வேலை செய்த்து..பிடிக்காமல் பைக்கில் ஊரெல்லாம் சுற்றி ஒரு மலையிடம் படுத்து யோசித்தது  எல்லாமும் சொல்லும் வரை எனக்குப் பிடித்திருந்த்து..தேடல் வலி எனக்கும் தெரியுமென்பதால்.
அப்புறம் தான்..... திடேரென தன் கழுத்திலிருந்த் ருத்ராட்ச மாலை கழற்றி என் கையில் கொடுத்து கண் மூடச்சொன்னபோது.. ‘சரி பார்ப்போமே’ என்றே ஒத்துழைத்தேன்.
சில நிமிடங்களில் what happened எனும் கேள்விக்கு என் சத்தியமான விடையான nothing என்றவுடன் ..You are not peaceful meditate more என அந்த “திரு” வாய் சொன்னபோதும்.. சும்மாயிருந்தேன். அதெல்லாம் வயதுக்கெல்லாம் நான் மரியாதை தந்திருந்த காலம்.
Why don’t you come for the seven day program..எனும் அழைப்பிற்கு மையமாய் சிரித்து விட்டு வெளிவந்தால், கூடவே அந்த இளைஞன்..”ட்ரை பண்ணிப் பாருங்க” என, ‘ உனக்கேம்ப்பா என் ஆத்மா உயரணும்னு ஆசை. என்றதும் அவன் சொன்ன பதில்== சார் நீங்க இதை experience பண்ணிட்டு உங்க ஷோவுல சொன்னா நிறைய பேருக்கு பலன் இருக்குமில்லே..
பாண்டே நிகழ்ச்சியில் என்னைத் தெரியாது என்று சொன்னது ஒருவேளை மறதியாகவும் இருக்கலாம்.. நான் கூட நிறைய போலிகளைப் பார்த்திருக்கிறேன் அதில் பலர் பெயர் நினைவில் இல்லை. இவன் போல் பெரிய அளவில் பொய்மை பரப்புவோர்தான் நினைவில் உள்ளது- கோபத்துடன்,

திருடியே பேசுபவன் மட்டுமல்ல, தீமையானவன் என்பதாலேயே இவன் மீது என் கோபம்.
https://www.youtube.com/watch?v=V3SHyl8piQc&feature=share

0 comments:

Post a Comment