Wednesday, April 1, 2009
ஆர்வமா, அவசியமா? கால நிர்ப்பந்தமா?
இன்னமும் பேனாவால் எழுதுமளவிற்கு தட்டச்சு வரவில்லை.
என் language பாஷையாகி இப்போதுதான் மொழியாகிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில், இப்படி ஆங்கிலவழி தமிழ் (அதுவும் தேடித்தேடி) அடித்துக்கொண்டிருப்பதில் ஒரு சிக்கல்! இப்படி அடிப்பதையாவது பயிற்சி மூலம் வேகப்படுத்திக்கொள்ளும் ஆர்வக்கோளறின் அதீதத்தில், rudhran என்பதை ruthran என்று அடித்துவிட்டு என் மின்னஞ்சல் வேலை செய்யவில்லை என்றெல்லாம் கவலைப்பட நேர்ந்தது! இது ஆங்கிலம் தட்டும் போது தவறுகளாக வெளிப்படுமோ என்றும் ஓர் அச்சம் ஆரம்பமாக
என்ன தான் எழுதித் தொலைப்பது?
கவிதைகள் போல் சில பாசாங்குகள் செய்யலாமா?
உள் புகுமுன் மனக்குகைக்குள்ளேயே பதுங்கிக்கொள்ளலாம்
கண்களை மூடிக்கொள்ளலாம்
சூரியன் வந்தாலென்ன? விடியல் விரும்பினால்தானே
Thursday, March 26, 2009
தேர்தல் வரும்போதாவது தோன்றுபவை
மிகவும் சிரமத்துடனும், மிகுந்த கோபத்துடனும் எப்படியாவது எழுதித்தான் ஆக வேண்டுமென்று தீர்மானித்து, எழுதுகிறேன், அச்சுப்பிழைகள் இருக்கும், மன்னிக்க வேண்டுகிறேன்.
அப்படி என்ன தலை போகிற அவசரம்?
தலை இருந்தும் பிரயோஜனமில்லையே என்ற வெறுப்பு, வெறி,வயிற்றெரிச்சல் தான். தலை என்பதை மேலிருக்கும் மயிராக மட்டும் பார்க்காமல், உள்Liருக்கும் மூளையாகவும் கருதுவதால் தான் இப்படி ஒரு (வெற்றாக இருந்துவிட்டாலும்) முயற்சி.
வெட்டிப்பேச்சும், வசதியாக உட்காrந்து காலாட்டிக்கொண்டு பேசுவதும் எனக்கும் பிடிக்கும். ஆனால், வரப் போகிறது ஒரு தேர்தல்!
தேர்தல் என்றால் தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும்!
இருக்கிறதா?
யார் நிற்கிறார்கள்? எதற்காக அவர்களுக்கு என் வாக்கு? போடலாமா வேண்டாமா?எல்லாம் யோசித்து விட்டு, போடாவிட்டால் என்றும் தோன்றும் போடாவிட்டால்?
அன்புமணியும் கனிமொழியும் அடுத்து 'பாராளுமன்றப் பிரதிநிதிகளாக' ஆகாமல் போய் விடுவார்களா?
தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுngகளேன் எனக்கும், எல்லோர்க்கும்.
Tuesday, March 17, 2009
Monday, March 16, 2009
சில நேரத்து வார்த்தைகள்
சரியான உச்சரிப்பில்
சகல சக்தியும் ஜ்வாலித்தெழும்
உள் அதிரும்
இமை நடுவில் பிரிந்தலறும்
வான் வயிற்றில் விரிந்து
உடலெங்கும் மேகம் படரும்
காதுகளில் நட்சத்திர கோஷம் எழும்
அந்தக் கணச்சிலிர்ப்பில்
உயிர் உதறி வெடித்துச்சிதறி
மனதில் மனது மூழ்கியெழ
இந்தப் படகுக்கு-
கடலே தலையணையாகும்
கடலும் தளர்ந்து படரும்
விழிப்பில் உலகம்
கண்படும்
உண்மை ஒப்பனைக்குத் தயாராகும்.
இது 1986ல் எழுதியது! வார்த்தைகளில் எத்தனை வித்தியாசங்கள்!இது என் சவலைப்பதிவின் ஆரம்பக்கட்டம் என்பதால் பழையனவற்றை தட்டச்சு செய்து பழகிக்கொள்கிறேன். ஒரு (ஓர் என்றுதான் இருக்கவேண்டும், ஆனால் a /an என்பதற்கும் one என்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்துப்பார்த்துவிட்டு ஒரு என்றே விட்டுவிட்டு) உண்மையான கவிஞன் சொன்னது போல், இது கவிதையல்ல என்றாலும் அப்படி ஆக்கிக்கொள்ளலாம்.
இங்கே வலைப்பதிவு என்று அடிக்கும் போது அது சவலைப்பதிவு என்று ஆனது யதேச்சை! சில நேரங்களில் சில வார்த்தைகள் எழுதப்படுவதில்லை!
Sunday, March 15, 2009
முன்பு எழுதியது தான்..
இக்கட்டுரைக்கான சுட்டி:
http://tamilarangam.blogspot.
உள்
என்னைத் தேடி என்னுள்ளேயே
கணக்குமிழி சிதறலில்
வட்டங்கள்
கணக்கில் சேரும் பூஜ்யங்கள்
written in 1976, retrieved from a tattered diary in 2009.

