Tuesday, July 14, 2009

பேச்சின் பொருள்மீறி

பேச்சின் பொருள்மீறி பொய்கள் முன்னிற்க‌

கூச்சம் சிலநேரம் தடைபோடும்-

நீச்சம்

அடையாத வார்த்தைகளை மட்டும்தான் சில நேரம்

அடையாளம் காணும் மனம்.




அடையாளம் தெரிந்தாலும் பகிரங்கமாக்கிவிட‌

முடியாத உணர்வுகளை வார்த்தைகள்-

அடிமனத்தில்

புதைக்கின்ற வழக்கத்தால் கனவுகளில் மட்டும் தான்

பதிவாகும் கோபக்குறை.




கோபம் குறைவாக வெளியேறக் காரணமேன்

ஞாபகங்கள் பயமூட்டி வைக்கும்

சாபத்தின்

விளைவாக வாழ்க்கை தடுமாறும் என்கின்ற‌

பிழையான கற்பித்தல்தான்.




கற்பித்தவை கிடக்கட்டும்

கற்போமே..



சும்மாவும் எழுதுவது உண்டு

6 comments:

  1. அருமை டாக்டர்.

    அனல் தெறிக்குது..

    ReplyDelete
  2. அருமை டாக்டர். தமிழ் தவழுது, விளையாடுது.


    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  3. கற்பித்தவை கிடக்கட்டும்

    கற்போமே..\\

    அருமை.

    ReplyDelete
  4. //சும்மாவும் எழுதுவது உண்டு//

    நாங்க சீரியஸா தான் படிப்போம்!

    ReplyDelete
  5. //வால்பையன் said...
    //சும்மாவும் எழுதுவது உண்டு//

    நாங்க சீரியஸா தான் படிப்போம்!//

    :-) ஆமாம் டாக்டர்! வெகு அருமை...

    ReplyDelete
  6. do please share those things you have learnt and wish to teach us.
    that was too good

    ReplyDelete