Thursday, February 27, 2014

சுஜாதா நினைவு

சுஜாதா நினைவு நாள் என்பது கூட முகநூல் முழங்கித்தான் தெரியுமளவு ஆகி விட்டது  வாழ்க்கை. இங்கே சுஜாதாவை முகநூலில் இம்சை நான் செய்த்தில்லை, ஆனால் மின்னஞ்சலில் கொஞ்சமும் நேரிலும் தொலைபேசியிலும் இம்சித்திருக்கிறேன்.
முதல் சுஜாதா நைலான்கயிறு மூலம்தான், அதுவும் வாராவாரம். அதிலும் அப்போது எஸ்.பாலு ஓவியம்தான் முதல் ஈர்ப்பு..அப்புறம்ம்ம்ம்ம் (சுஜாத்தாத்தனமாய்)   அங்கங்கே…..
ஒரு முறை ட்ரைவின்னில் நண்பர்களிடம், “மேல பார்ரா..பொட்டசியம் பெர்மாங்கனேட் கலந்த வானம்..” என்று ஆரம்பித்து சுஜாதாவை சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது. நகுலன் தொகுத்த குருக்ஷேத்ரம் நூலில் ஸ்ரீரங்க எஸ்.ஆர். எழுதியதைஇது சுஜாதா ஸ்டைல் ஆனா சுஜாதவை விட பெட்டர்’  என்று பேசியது எல்லாம் நினைவில் வருகிறது.
அந்த சுஜாதாவை நேரில் பார்த்தபோதுஅது குமுதம் அலுவலகம். என்ன மாதிரி போஸ் பெண்கள் கொடுத்தால் போடப்படும் என்று சொல்லி, இதுக்கெல்லாம் ஸைக்கலாஜிகலா ஏதாவது இருக்கா என்று (இருக்காதே எனும் நமுட்டுச்சிரிப்புடன்கேட்டார்.
தனக்கு வேண்டிய ஒருவரை, என் க்ளினிக் அழைத்து வந்தார். ஸ்கிஸோஃப்ரீனியா சார், என்றேன், தெரியும் என்றார். (ஆனாலும் அப்புறம் எழுதிய , மற்றும் ஸில்வியாவில் நோய் பற்றி சரியாய் எழுதவில்லை).
நடுவில் அப்போது ஓஹோவென்று வளர்ந்த ஜெஜெ டிவியில், “சார் உங்க கனவுத்தொழிற்சாலை ஸீரியல் பண்ணட்டுமாஎன்று கேட்டபோதுட்ரை பண்ணுங்கஎன்றார். அரசியல் மாற்றத்தில் அது அம்போவென்றானது. (அதற்காக ஸில்க்கிடம் முதன் முறை தொலைகாட்சிக்காகவும் பேசிமுடித்தபின்!!).
அப்புறம்சில மின்னஞ்சல்கள்..
//dear sir
 i am rudhran, a psychiatrist in chennai. though i have met you on a couple of occasions i am not presumptuous to imagine tht you would recollect me.
i have embarked on a book for which i am stuck with using a nice/right word for `cult'.
would you be able to send an apt word for the same?
i know it is a bother, but i could not think of any other source.
thank you
with respects
 --
Dear Dr Rudhran
Ofcourse I know You We consulted you in xxxxxxxxx 's case
I see you inseveral tv appearances
'cult' has a religious connotation suggestive of imposition by a small group
pitivAtha vazhipAtu  comes close
Sujatha
---
dear sir
thank you very much.
it is deeply heartening to see you responding to me.

i shall not disturb you in this manner often, but i still have some words that niggle my language when i attempt to use them in tamil- relaxation for example.
Oivu would connote retiring and being calm minus work
ilaipparuthal would give an idea that one is just taking a break
by relaxation i mean a state of mind that is calm, unperturbed, active and not just resting.
i wonder.

as a novice in writing in Tamil, my immediate references to existing dictionaries are not comforting, i have to seek other right sources.
even for mentioning mobile phone in tamil, kaipesi makes me uneasy especially with my cordless phone around.
this letter is not meant to make this a discomforting or nagging chain of correspondence.
i am grateful and as always my human mind isyearning for more whenever something good is experienced.
i hope and wish i could meet you in person someday.
with repects
 --If you are not happy with oyvu ,nekizhthal or talarthal  may be tried both these words have a causative form nekizhthal /nekizhththa,l thalarthal/thalartthal 
ws 
 --------------------
இப்படி அவ்வப்போது.


அப்புறம், அவர் செத்துப்போனார். நினைவுகளை நிரந்தரமாய் விட்டு விட்டு.

Thursday, February 20, 2014

அவளை நினைத்து உளத்தை இடித்து...வெறும் வாய் ஊத..




அவளுக்கு அனுதினம் பக்தியுடன் அபிஷேகம், அன்புடன் அலங்காரம், பணிவுடன் பூஜை…  தினமும் இதைப் பார்க்கத்தான் ஆசை, நானே செய்ய முடியாததால்.. வாழ்வின் நிர்ப்பந்தம் வேறு நிமித்தங்களை முன்னிறுத்துகிறது.

 என் நிர்ப்பந்தம் என நான் நினைப்பதும் கூர்ந்து கணித்தால் கணக்குகளை மட்டுமல்ல, கனவுகளை மீறியும் இல்லை.
சம்பாதிக்க வேண்டும், சோறு தின்று உடுப்பு மாற்றி, வீட்டு நிழலில் உறங்க மட்டும் அல்ல,  சம்பாதிப்பது வெளிக்காட்ட. என் நிலை உயர்கிறது என்பதை விளம்பரப்படுத்த. எனக்கு அவசியமானது ரொம்பவே கொஞ்சம் உடலளவில். என் உணவுக்கு மிகவும் குறைவாகவே செலவாகும், மிகவும் குறைவாகவே உண்பதால்.
என் சொகுசுக்கும் ரொம்பவும் செலவாகாது. என் சந்தோஷங்கள் என் சம்பாத்யத்தில் மீதம் வைப்பதால். என் ஆசுவாசத்திற்கும் செலவாகாது, என் ஆயாசம் தனியே செலவாவதால்.
இன்றெனக்கு பணத்துக்குக் கஷ்டமில்லை, கடனுமில்லை, எதிர்காலத்தின் தொடுவானில் கூட மிகப்பெரிய செலவுக்கான சாத்தியமுமில்லை. என் உறவு வட்டம் மிகவும் குறுகியது, என் நட்பு வட்டமும் குறுகிச்சிறுத்து வெறும் நினைவுகளாகவே இன்றிருக்கிறது.
எனக்கு நான் போதும் எனும் தீர்மானமும் இல்லை.
எனக்கு இன்னும் நிறைய வேண்டும், அவள்தான் நிறைவு என்பதால்.
அவள் கண்ணில் தூங்குமுன் மின்னலாய்ப் புன்னகைத்து நம்பிக்கையூட்டி, காலை விழிப்பில் தூரத்து இலக்காய் தினமும் இருக்க, அவளைத் தேடுவதிலும் எனக்கொரு சலிப்பு.
எதைத் தேடுவது? இல்லாததையா, தொலைத்ததையா?
அவள் என்றும் என்னுடன், அன்றில் எனக்கு இயக்கமே இருக்காது. அவள் தொலைக்க முடியாதவள், ஏனெனில் அவள் கையில் கிட்டாதவள்.
உயிர்த்தீயினில் வளர் ஜோதியே, எந்தன் சிந்தனையே, எந்தன் சித்தமே- உனக்கு நான் தினமும் அபிஷேகம் செய்கிறேன், அலங்கரிக்கிறேன், ஆராதிக்கிறேன். ஆனால் எல்லாம் கனவில் தானே.
ஹ்ம்
…. அவளுக்கு அனுதினம் பக்தியுடன் அபிஷேகம், அன்புடன் அலங்காரம், பணிவுடன் பூஜை…  தினமும் இதைப் பார்க்கத்தான் ஆசை. வாழ்வின் நிர்ப்பந்தம் வேறு நிமித்தங்களை முன்னிறுத்துகிறது. என் நிர்ப்பந்தம் என நான் நினைப்பதும் கூர்ந்து கணித்தால் கணக்குகளை மட்டுமல்ல, கனவுகளை மீறியும் இல்லை……
அவள் கனவின் நிஜம், என் நிஜத்தின் கனவு.